ஓசூர்: நாடு முழுவதும் ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் பல்வேறு விதிமுறை வழிகாட்டுதலை வழங்கியுள்ளன.
குறிப்பாக நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணாலும், ரசாயன கலவையில்லாத வண்ணப் பூச்சுடன் சிலைகள் தயாரிக்க வேண்டும். மேலும், சிலைகளை விசர்ஜனம் செய்ய குறிப்பிட்ட நீர்நிலைகள் ஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.