ராய்ப்பூர்: ஓராண்டுக்குள் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று சத்தீஸ்கர் போலீஸ் மூத்த அதிகாரி சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. சத்தீஸ்கர் காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு அதிரடிப்படை, மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் ஒன்றிணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.