காந்திநகர்: குஜராத்தின் மொத்த பொதுக் கடன் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளது. குஜராத்தின் மக்கள் தொகையை 6 கோடியாகக் கருதினால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 2023-24ல் அரசின் கடன் ரூ.3.77 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போது ரூ.3.77 லட்சம் கோடியாக உள்ள குஜராத் அரசின் கடன் 2024-25ல் ரூ.3.99 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2022-23ல் நிதி அமைப்புகளிடம் குஜராத் அரசு வாங்கிய ரூ.3,463 கோடி கடன், 2023-24ல் ரூ.7,000 கோடியாக அதிகரித்துள்ளது. குஜராத் மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூ.66,000 கடன் சுமையை பாஜக ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி மாநிலத்தை கடனில் தள்ளியுள்ளது. 2025-26க்குள் மாநிலத்தின் கடன் ரூ.4.55 லட்சம் கோடியை எட்டும் எனவும் குஜராத் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
The post கடனில் தத்தளிக்கும் குஜராத் அரசு: 2025-26க்குள் மாநிலத்தின் கடன் ரூ.4.55 லட்சம் கோடியை எட்டும் என காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.