டெல்லி: கவிதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஓ ரத்தவெறி கொண்டவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்” எனத் தொடங்கும் கவிதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் ப்ரதாப்கார்ஹி மீது குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓஹா, உஜ்ஜால் புயான் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவரின் கருத்து பெரும்பாலோனோருக்கு பிடிக்கவில்லை என்றாலும், அந்நபரின் கருத்து சொல்லும் உரிமை மதிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும். கவிதைகள், நாடகங்கள், கலைகள் ஆகியவை, மனிதர்கள் வாழ்வை மேலும் அர்த்தமாக்குகின்றன” என நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்து. காங்கிரஸ் எம்.பி. மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
The post கவிதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.