1925-ஆம் ஆண்டு கான்பூரில் தொடங்கப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) எல்லாவிதத்திலும் அன்றைய ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான (USSR) சோவியத் யூனியனைப் பின்பற்றியது.
இந்தியாவில் ஆயுதப் புரட்சியின் மூலம் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை அகற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் விளை நிலங்களையும், தொழிற்சாலைகளையும் அரசுடமையாக்கி, வறுமை, சுரண்டலை ஒழிப்பதை தன் நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தி தலைமை ஏற்ற, இந்திய தேசிய காங்கிரஸ் (INC) அளவுக்கு, அதற்கு பொதுமக்கள் செல்வாக்கு, உறுப்பினர்கள், கட்டமைப்பு ஏற்படவில்லை.