சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை தினம் தினம் விசாரணைக்கு அழைத்து அலைகழிக்கும் காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 14ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரத்தில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாகவும், கோவை துடியலூர் பகுதியில் நடு ரோட்டில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது சம்பந்தமாகவும் பேசினார்.