மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் காட்டு விலங்குகளின் தொல்லையை அடிக்கடி சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது. காட்டு விலங்குகள் பயிர்களை நாசம் செய்வதன் மூலம் பெரும் நஷ்டமடைவதையும் எடுத்துக்கூறி வனத்துறையிடமிருந்து நஷ்டஈடு கேட்கும் நிலையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடந்த குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர். ‘‘காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகவும், காட்டுப் பன்றிகளை கொன்றாலோ, காடுகளுக்குள் துரத்தியடித்தாலோ விவசாயிகள் மீது வழக்குப் பதியாமல் இருந்தால் போதும். இப்பிரச்சினையை விவசாயிகளே பார்த்து கொள்வார்கள். அதிகாரிகள் தலையிடாமல் இருந்தால் போதும்’' என்றெல்லாம் கூறியுள்ளனர்.