மொழிவாரி மாநிலம் அமைந்த பின்பு முதல் தேர்தல் 1957-ல் நடைபெற்றது. இது காமராஜர் முதல்வரான பின் நடந்த முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வேட்பாளர் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பாக, “எந்தத் தொகுதியில் எந்த சாதி மெஜாரிட்டி என்று பார்த்து அந்த சாதியைச் சார்ந்தவரையே காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் தேர்வு செய்கிறார்; காங்கிரஸ் மூத்த தலைவர்களைப் புறக்கணிக்கிறார்; புதிதாக காங்கிரசுக்குள் வந்த பணக்காரர்கள், கள்ள மார்க்கெட், கலப்பட வியாபாரிகள் போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறார்; காங்கிரஸ் கட்சியில் சர்வாதிகாரிபோல நடக்கிறார்; ஜனநாயக நடைமுறைகளை புறக்கணிக்கிறார்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை காமராஜர் மீது சுமத்தினர்.