சென்னை: கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மாமன்றத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.