சென்னை: கிளவுட் சேவைக்கான செலவுத் தொகைக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை டேட்டா வவுச்சர் வழங்கும் வகையில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கிளவுட் உட்கட்டமைப்பு செலவுகளை குறைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரைவாக வளர்வதற்கும், எளிதாக புதுமைகளை உருவாக்குவதற்கும் உதவும் வகையில்தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் 2025-26 நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.