புதுடெல்லி: குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது.
குஜராத்தில் முதல்வராக இருப்பவர் பூபேந்திர படேல். கடந்த 2021, செப். 13 முதல் இவர் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 162 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். குஜராத்தின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது.