Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.1,188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.1,188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை

EDITOR


அகமதாபாத்: குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. குஜராத் மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரான உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் மூத்த நீதிபதி ஏ.ஒய். கோக்ஜே ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மாநிலத்தின் அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் மையங்களும் லோக் அதாலத்தை நடத்தின.

இதில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, சிவில் வழக்குகள், திருமண மற்றும் தொழில் தகராறுகள் என மொத்தம் நிலுவையில் இருந்த 18,34,231 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் ஒரே நாளில் மொத்தம் 11,69,083 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. குஜராத் லோக் அதாலத் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மொத்தமாக ரூ.1,188.92 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த லோக் அதாலத்தின் முக்கிய சிறப்பம்சமாக, வழக்கு பதிவாவதற்கு முந்தைய நிலையிலேயே சமரசம் பேசும் ‘மாற்றுத் தீர்வு முறை’ மூலம் 7,49,486 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.112.37 கோடிக்கு சமரசம் எட்டப்பட்டது.

இது தவிர, 6,88,276 போக்குவரத்து மின்னணு அபராத வழக்குகள் மூலம் ரூ.35.74 கோடி வசூலிக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பிரிந்து வாழ்ந்த 3,093 தம்பதியரின் திருமண வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த 844 பழைய வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டதும் இந்த லோக் அதாலத்தின் மற்றுமொரு சாதனையாகும்.

The post குஜராத் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.1,188 கோடிக்கு சமரசம் செய்து சாதனை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

மனைவியின் டார்ச்சரில் இருந்து விடுதலை விவாகரத்து கிடைத்ததும் 40 லிட்டர் பாலில் குளியல்: அசாமில் கணவன் வைரல் சம்பவம்

July 15, 2025

ஒடிசாவில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம் பாஜக அமைப்பின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி காட்டம்

July 15, 2025

6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி

July 14, 2025

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் பீகாரில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பு!!

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?