தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் இஸ்ரோ பணிகளைத் தொடங்கி உள்ளது. இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமைவதற்கான முதற்கட்ட பணியாக பூமி பூஜையுடன் பணிகளை இன்றைய தினம் இஸ்ரோ தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுமார் 2233 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிகள் நாட்டினார். அன்றைய தினமே ரோகிணி என்ற சிறியரக ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து அதற்கான பணி என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் பெக் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் குலசேகரப்பட்டினத்தில் 2500 ஏக்கர் கையக படுத்தப்பட்டுள்ள பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இஸ்ரோவின் முக்கிய அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ள பணிகள் என்பது யூ.ஏ.எஸ் 1, யூ.ஏ.எஸ் 2 என்றும் அதேபோல் 4 சர்வீஸ் பில்டிங்கும், காம்ப்லக்ஸ்சும் இத இடத்தில் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்க படுவதாக தெரிய வந்துள்ளது. இத்தகைய பணி ஓரிரு ஆண்டுகளில் நிறைவு பெற்று குலசேகரப்பட்டினத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த பகுதியிலிருந்து முதற்கட்டமாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போது இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
The post குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய இஸ்ரோ: அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.