“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்தது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: “விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.