Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கேரளாவின் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி: கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

கேரளாவின் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி: கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

EDITOR

கோழிகோடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்காட்டைச் சேர்ந்த 59 வயது நபர் நிஃபா வைரஸால் இறந்த நிலையில் அவரது மகனுக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், கண்ணூர் போன்ற பல மாவட்டங்கள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லை பகுதிகளான பட்டிசாலை, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சியாமளா மேற்பார்வையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பட்டிசாலை, முள்ளி சோதனைச்சாவடிகளில் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் இருந்தால் அவர்களது பெயர், ஊர், தொடர்பு எண், செல்லும் இடம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் மிகவும் கொடிய நோய் என்றும், சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் நாடு முழுவதிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரளாவின் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி: கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது’ – அண்ணாமலை பேச்சு
  • பாகிஸ்தானை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது வங்கதேசம்: டி20 கிரிக்கெட்
  • பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?
  • ‘அனிமல்’ இயக்குநரிடம் மன்னிப்புக் கோரும் ‘சயாரா’ இயக்குநர்!
  • “கூட்டணி ஆட்சிதான்…” – பழனிசாமி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்
  • போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்!

You Might Also Like

தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது

July 16, 2025

எய்ம்ஸ் கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த ஒடிசா மாணவர்

July 19, 2025

ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து சிஆர்பிஎப் வீரரை தாக்கிய ‘கன்வர்’ பக்தர்கள்: 7 பேர் அதிரடி கைது

July 20, 2025

மிசோரமில் தஞ்சமடைந்த 3000 மியான்மர் அகதிகள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர்

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?