கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியதால் 30,000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 30,000 கனஅடி நீர் திறக்க முடிவு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரும் அதிகரிக்கும். கபினி அணையில் இருந்து காவிரியில் ஏற்கனவே 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியதால் 30,000 கன அடி நீர் திறக்க முடிவு appeared first on Dinakaran.