சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார்.
திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வனி குமார். அதன் மூலம் மும்பை அணி இந்த சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்கி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை அஸ்வனி குமார் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.