டெல்லி : கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதிர்காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால் உரிய அனுமதிகளை பெறவேண்டும் என ஈஷா தரப்புக்கு நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர். சுற்றுசூழல் விதிகளை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
The post கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.