
கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி சென்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

