சென்னை: சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.  
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.