ஜம்மு-காஷ்மீர்: சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பூஞ்ச் மாவட்டம் திக்வார் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக இந்திய ராணுவன் தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திக்வார் எல்லை வழியாக தீவிரவாதிகள் யாரேனும் ஊடுருவ முயற்சியா என்று திக்வார் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள நேரத்தில் பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கிச் சூடு!! appeared first on Dinakaran.