Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: சாவர்க்கர் குறித்து புதிய மனு தாக்கல்; ராகுல் பிரதமராக போகிறாரா?.. குறுக்கு கேள்வி கேட்டு மடக்கிய நீதிபதி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

சாவர்க்கர் குறித்து புதிய மனு தாக்கல்; ராகுல் பிரதமராக போகிறாரா?.. குறுக்கு கேள்வி கேட்டு மடக்கிய நீதிபதி

EDITOR

மும்பை: ராகுல்காந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது, ‘ராகுல் பிரதமராகப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று மனுதாரர் வக்கீலிடம் நீதிபதி குறுக்கு கேள்வி கேட்டு மடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினரால் கொண்டாடப்படும் வீர சாவர்க்கர் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, ‘சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்’ என்று அவர் கூறிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர், புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ‘அபினவ் பாரத் காங்கிரஸ்’ என்ற அமைப்பின் நிறுவனர் பங்கஜ் ஃபட்னிஸ் என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தவறான கருத்துக்களைப் பரப்பி குழப்பம் விளைவிக்கிறார். அவர் பிரதமரானால் நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கும்’ என்று மனுதாரர் தரப்பில் விநோதமான வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று மனுதாரரிடம் குறுக்குக் கேள்வி எழுப்பி அவரது வாதத்தை நிராகரித்தனர். மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே புனே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post சாவர்க்கர் குறித்து புதிய மனு தாக்கல்; ராகுல் பிரதமராக போகிறாரா?.. குறுக்கு கேள்வி கேட்டு மடக்கிய நீதிபதி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஜிம்கானாவை உதறிவிட்டு புதிய கிளப் உலகுக்கு இந்திய செல்வந்தர்கள் நகர்வது ஏன்?
  • பஹல்காம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்: ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரபரப்பு
  • புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
  • மான்செஸ்டர் டெஸ்டில் கருண் நாயர் இல்லையெனில் 3-ஆம் இடம் யாருக்கு?
  • கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பாமக எம்எல்ஏக்கள் மூவர் இடைநீக்கம் – ராமதாஸ் அதிரடி
  • தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

You Might Also Like

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம் 2 சகோதரிகள் தற்கொலை

June 23, 2025

கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவி சடலமாக மீட்பு

July 14, 2025

விண்வெளி நாயகனாக வரலாற்று சாதனை படைத்து பூமிக்கு திரும்பினார் சுபான்சு சுக்லா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து

July 15, 2025

கங்கை நதி நீர்மட்டம் உயர்வு: வாரணாசியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த அரசு

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?