லக்னோ: நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு டிசம்பர் 17 அன்று மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, வீர் சாவர்க்கரைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டபடி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவருடன் சந்திப்பு நடத்துவதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்று ராகுல் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது விலக்கு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ராகுல்காந்தி நேரில் ஆஜராகாததால் ரூ.200 அபராதம் விதித்தது. மேலும் விசாரணையை ஏப்ரல் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
The post சாவர்க்கர் வழக்கில் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம்: நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடவடிக்கை appeared first on Dinakaran.