சென்னை : சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.இந்த நிலையில் மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை-மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
19ம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையத்தில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டுகள் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, விக்டோரியா விடுதி, ரயில்வே கார் பார்க்கிங், வாலாஜா சாலை வி.பட்டாபிராமன் கேட் ஆகிய இடங்களில் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!!
*ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்; பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது
*கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே வர வேண்டும்.
*சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை சம்பந்தமான பொருட்களை கொண்டு வரக் கூடாது.
*ரசிகர்களுக்கு அனைத்து கேலரிகளிலும் விலையில்லா குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post சிகரெட், குட்கா, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது: ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!! appeared first on Dinakaran.