*இணை ஆணையர் உத்தரவு
சித்தூர் : சித்தூர் லட்சுமி நகர் காலனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள பிரஜா தர்பாரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பெறப்பட்டன. நேற்று மாநகராட்சி ஆணையர் வெங்கட் ரமணா ரெட்டி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசி அவர்களின் பிரச்சினைகளை நேர்மறையாகக் கேட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அந்த இடத்திலேயே பேசி பல பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது: பொதுப் பிரச்சினைகளைத் தீர்க்க முதல்வரின் உத்தரவின் பேரில் நடத்தப்படும் பொதுமக்கள் தர்பார் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி பிரச்னையின் தீவிரத்தை பொறுத்து, அதிகாரிகள் விரைவாக பதிலளித்து அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனை தெருவிளக்குகள், சுகாதாரம், நிலப் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகள் குறித்து புகார் மனுக்கள் வழங்கினார்கள்.
மனுதாரர்களுக்கு ஓரிரு நாட்களுக்குள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். அதேபோல் சாலைகள், கால்வாய்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் கட்டுமானம் குறித்து கள ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாநகர நிர்வாக அதிகாரிகள் பிரச்னைகளை விரைவாக தீர்த்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுப் பிரச்னைகளும் அதே அளவில் தீர்க்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த குறைதீர் கூட்டத்தில் 84 மனுக்கள் பெறப்பட்டன. இவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆன்லைனில் அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் தாசில்தார்கள் ஜெயந்தி, லோகேஷ்வரி, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூரில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி பொதுமக்கள் பிரச்னைகள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.