*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாமில் பெற்ப்பட்ட327 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இணை கலெக்டர் சுமித்குமார், தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியோர் உதவித்தொகை , சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டுமென்றும், சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 327 மனுக்களை வழங்கினர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த மனுநீதினால் முகாமில்இணை கலெக்டர் வித்யாதாரி, டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிசுத் முதன்மைச்செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் 327 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.