திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு முதல்முறையாக, செங்கழுத்து உள்ளான் பறவை வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகுதியில் 420 ஏக்கரில் நஞ்சராயன் குளம் உள்ளது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வலசை வரும் வெளிநாட்டு பறவைகளும், இங்கு வந்து தங்கிச்செல்கின்றன. இதனால், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து, இதன் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.