சென்னை: மதுரையில் இருந்து 36 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டபோது நாய் மீது மோதாமல் இருக்க பேருந்து டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் பேருந்தின் மீது பலமாக மோதியது.
இதையடுத்து காரின் பின்னல் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து காரின் மீது மோதியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதியதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.