‘இந்து தமிழ் திசை’யின் கடந்த ஏப்.3-ம் தேதி நாளிதழின் 2-ம் பக்கத்தில் ‘சாதி ஒழிந்த இடமாக மெட்ரோ இருந்து விட்டுப் போகட்டுமே’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரை தொடர்பாக, பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயிலில் பணியாளர்கள் தேர்வில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பொறுப்புக்கு சென்றால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். தமிழர்களுக்கு வேலை கிடைக்காது என்ற அச்சத்தையும் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அதனை சுட்டிக்காட்டி அந்த கருத்து ஏற்புடையது அல்ல என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கூறி உள்ளது.