புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என திரிணாமுல் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தொடர்நது தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவர் சகாரிகா கோஷ் கூறுகையில், “பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகள் பற்றி அம்பலப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் ஒன்றிய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி இந்திய குடிமக்களும் தெரிந்து கொள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டிய நேரம் இது. வௌிநாடுகளுக்கு சென்றுள்ள குழுவினர் நாடு திரும்பியதும் வரும் ஜூன் 5ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்” என்றார்.
The post ஜூன் 5 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமர் மோடிக்கு திரிணாமுல் எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.