சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளாகப் பேசுபொருளாக மட்டுமே இருந்த இந்த விவகாரத்தில், மாநில அரசுகள் ஒரு முடிவை நோக்கி நகர இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கிறது.
2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் (RTE), பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 2011இல் ஆசிரியர் தரத்துக்குக் தேசிய அளவில் ஒரே சீரான அளவுகோலை நிறுவ தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) புதிய விதிகளை உருவாக்கியது.