புதுடெல்லி: டெல்லியில் நேற்று கடும் புழுதிப்புயல் வீசியதால் பல விமானங்கள் மாற்றி விடப்பட்டன. கோடைகாலம் தொடங்கி விட்டதால் டெல்லியில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென்று புழுதிப்புயல் வீசியது. இதனால் டெல்லிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். புழுதிப்புயல் காரணமாக சாலையில் சென்ற பயணிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் நிலைத்தடுமாறினர்.
பல இடங்களில் மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 15 விமானங்கள் மாற்றி விடப்பட்டன. பல விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே காற்று மாசு பிரச்னை இருந்து வரும் நிலையில், தற்போது வந்த புழுதிகாற்று காற்றின் தரத்தை மேலும் பாதிக்கும் என்று தெரிகிறது.
The post டெல்லியில் புழுதிப்புயல் appeared first on Dinakaran.