டெல்லி: டெல்லி லோதி எஸ்டேட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அரசு இல்லத்தை மாயாவதி காலி செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக 35 லோதி எஸ்டேட் பங்களாவில் காலி செய்வதாக மாயாவதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்சித் தலைவர் என்ற வகையில் மாயாவதிக்கு 2024ல் டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அரசு பங்களாவை மே 20ல் காலி செய்த மாயாவதி, வீட்டு சாவிகளை மத்திய பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தார்.
The post டெல்லி லோதி எஸ்டேட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அரசு இல்லத்தை காலி செய்தார் மாயாவதி appeared first on Dinakaran.