டெல்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி இதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8-ன் படி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் தண்டனை பெற்றால் அவர்களுக்கு 6 ஆண்டுகள் தடை என்பதே பொருத்தமானதாக உள்ளது. வாழ்நாள் தடை மிக கடுமையாக இருக்கும். தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான தடை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
The post தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.