சென்னை: தமிழகக் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175-வது நிறுவன தினவிழா சென்னை கிண்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார், முன்னாள் இயக்குநர் ஏ.சுந்தரமூர்த்தி உட்பட பல்வேறு அலுவலர்கள், துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 175-வது ஆண்டை முன்னிட்டு மையத்தின் சார்பில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.