சென்னை: தமிழக வனத்துறை சார்பில், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக “பிளாஸ்டிக் இல்லாத வனம்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தொடக்க நிலையிலேயே தடுக்க வனத்துறையின் 132 சோதனைச் சாவடிகளிலும் சோதனை செய்த பிறகே, பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் அனுமதிக்கப்படுகின்றன.