டெல்லி: தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். 100 நாள் வேலை திட்டம், கல்வி நிதி ஆகியவற்றை ஒன்றிய அரசு உடனே வழங்க கோரினேன். இருமொழிக் கொள்கை தொடர அனுமதிக்க வேண்டும் என அமித் ஷாவிடம் வலியுறுத்தினோம். கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறும்; தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி இறுதி செய்யப்படும் என எடப்பாடி கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக எடப்பாடி மறுக்கவில்லை.
The post தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன்: எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.