Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தர்மஸ்தலாவில் கடந்த 2003ம் ஆண்டுகளுக்கு முன் மாயமான மருத்துவ கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க வேண்டும்: போலீஸ் எஸ்பியிடம் தாய் மனு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

தர்மஸ்தலாவில் கடந்த 2003ம் ஆண்டுகளுக்கு முன் மாயமான மருத்துவ கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க வேண்டும்: போலீஸ் எஸ்பியிடம் தாய் மனு

EDITOR

பெங்களூரு: மாநிலத்தின் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா வந்த தனது மகள் கடந்த 2003ல் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுப்பிடித்து கொடுக்க வேண்டும் என்று தாய், தென்கனரா மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்த ஒருவர், கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றினேன்.

நான் பணியில் இருந்தபோது, 100க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் கடந்த 11ம் தேதி வக்கீல்கள் மூலம் நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சுஜாதாபட் என்பவர் தென்கனரா மாவட்ட போலீஸ் எஸ்பி டாக்டர் அருணிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகள் அனனியாபட், மணிபால் கஸ்தூரிபா மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு அவருடன் படித்த தோழிகளுடன் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றார்.

இதில் இருவர் பொருட்கள் வாங்க வெளியில் சென்று விட்டு, விடுதிக்கு திரும்பியபோது, எனது மகள் அனனியா பட் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து எனக்கு தகவல் கொடுத்தனர். நான் வந்து தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை ஏற்காமல் புறக்கணித்து விட்டனர். கடந்த 22 ஆண்டுகளாக மகள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று தெரியாமல் கவலையில் உள்ளோம்.

ஒரு வேளை எனது மகள் இறந்து விட்டிருந்தால், அவரது உடலை தோண்டி, டிஎன்ஏ பரிசோதனை செய்து, உறுதி செய்தால், எங்கள் பிராமண சமூக வழக்கத்தின்படி இறுதி சடங்கு செய்து, அவரின் ஆத்மாவுக்கு அமைதி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வோம் என்று கூறியுள்ளார். இது குறித்து தென்கனரா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் இருந்து அனன்யா பட் என்ற மருத்துவ மாணவி காணாமல் போய் உள்ளார். மாணவியின் தாய் அளித்த புகார் குறித்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

* எஸ்ஐடி அமைக்க முதல்வரிடம் வக்கீல்கள் குழு வலியுறுத்தல்
தர்மஸ்தாலாவில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவிந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக வழக்கறிஞர்கள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தர்மஸ்தலாவில் கடந்த 2003ம் ஆண்டுகளுக்கு முன் மாயமான மருத்துவ கல்லூரி மாணவியை கண்டுபிடிக்க வேண்டும்: போலீஸ் எஸ்பியிடம் தாய் மனு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ் 
  • வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு
  • கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
  • இண்டியா கூட்டணியில் விரிசலா? – நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு
  • பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்
  • ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்

You Might Also Like

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடக்கம்

July 17, 2025

7 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பாழடைந்த வீட்டுக்குள் மனித எலும்புக்கூடு: ஐதராபாத்தில் பரபரப்பு

July 15, 2025

சிலர் கையெழுத்திடாமல் செல்வதால் குளறுபடி; எம்பிக்கள் வருகை பதிவுக்கு ‘மல்டி மாடல் டிவைஸ்’: மழைக்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம்

July 15, 2025

சட்டவிரோத மதமாற்ற புகார்; சங்கூர் பாபாவுக்கு ரூ.60 கோடி வெளிநாட்டு நிதி கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை தகவல்

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?