திருவள்ளூர்: திருத்தணி அருகே தாய்ப்பால் குடித்தபோது பச்சிளங் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தை சேர்ந்த பிரிதிவிராஜ் மற்றும் கோதை தம்பதியருக்கு சுமார் 62 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நேற்றைய இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது சிறிது நேரம் கழித்து குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்ட பெற்றோர்கள் அலறியடித்து கொண்டு குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பால் குடித்ததில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இத்தகைய குழந்தையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post திருத்தணி அருகே தாய்ப்பால் குடித்தபோது பச்சிளங் குழந்தை மூச்சுத்திணறி பலி..!! appeared first on Dinakaran.