திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி. அன்னதான அறக்கட்டளைக்கு சந்திரபாபு நாயுடு ரூ.44 லட்சத்திற்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடுவிடம் வழங்கினார்.