மதுரை: திருப்பரங்குன்றம் மலை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், “இந்து முன்னணி அமைப்பில் உள்ளேன். அறுபடை வீடு நமது என்று சொல்லி மீசைய முறுக்கு, இந்துக்களே புறப்படுவோம், என்று திருப்பரங்குன்றம் மலையுடன் ஒரு வாசகம் அடங்கிய பதிவை பாடலுடன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.