சென்னை: பெங்களூரு மாநகராட்சி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து நுரையுடன், விஷத்தன்மையுடைய ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுவதாக செய்திகள் வெளியானது.
இந்த விவகாரத்தை பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கர்நாடக தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: