சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் விக்கி என்ற இளைஞர் குடும்பத்துடன் தெருவோர கடை ஒன்றில் பழச்சாறு குடிக்கச் சென்றுள்ளார். மாதுளம் பழச்சாறு கேட்டு வாங்கி குடிக்க முயன்றபோது, அதிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
அவர் சுதாரித்துக் கொண்டு துர்நாற்றம் குறித்து பழச்சாறு தயாரித்த வடமாநில வாலிபரிடம் விசாரித்துள்ளார். அவர் முறையாக பதிலளிக்காததால், கடைக்குள் சென்று பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மாதுளம் பழங்களை சோதனையிட்ட போது, அவை கெட்டுப் போன நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.