By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது
Dinakaran India

தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது

EDITOR
Last updated: July 16, 2025 9:33 am
By EDITOR
2 Min Read
Share
SHARE

திருமலை: கள்ளக்காதலை எதிர்த்த கணவரை, மனைவி உள்பட 3 பேர் கர் ஏற்றி கொலை செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் பல்லேர்லா கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி (38). டிராக்டர் ஷோரூம் மேலாளர். இவரது மனைவி சுவாதி (33). இவர்களுக்கு 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுவாதி, தனது கணவர் மேலாளராக உள்ள அதே ஷோரூமில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சுவாதிக்கும், பல்லேபஹாட்டை சேர்ந்த சாய்குமார் (36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சுவாமி, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் சுவாதி கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தங்கள் கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்த கணவர் சுவாமியை தீர்த்துக்கட்ட சுவாதி முடிவு செய்துள்ளார். இதை தனது தம்பி மகேஷ், கள்ளக்காதலன் சாய்குமாரிடம் தெரிவித்தார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமியும், பல்லேரை சேர்ந்த அவரது நண்பர் வீரபாபுவும், பைக்கில் புவனகிரிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினர்.

கேட்டபள்ளி அருகே வந்தபோது இவர்களது பைக் மீது, கார் மோதியது. இதில் சுவாமியும், வீரபாபுவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் சுவாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீரபாபுவை மீட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுவாமி குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குடும்பத்தினரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில் சுவாதி, தனது தம்பி மகேஷ் மற்றும் சாய்குமாருடன் சேர்ந்து, தனது கணவர் சுவாமியை கார் ஏற்றிக்கொன்றது தெரியவந்தது.

இதற்காக இவர்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்களது திட்டம் முடிந்ததும் காரை அங்குள்ள ஒரு மாம்பழ தோட்டத்தில் விட்டுவிட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையில் சுவாமி, சாலை விபத்தில் இறந்ததாக கூறி அனைவரின் முன்பு சுவாதி கதறி அழுது நம்ப வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுவாதி, மகேஷ், சாய்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை எதிர்த்த கணவரை மனைவியே கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தெலங்கானாவில் கள்ளக்காதலை எதிர்த்ததால் ஆத்திரம்; கார் ஏற்றி கணவரை கொன்று விட்டு நாடகமாடிய கில்லாடி மனைவி: கள்ளக்காதலன், தம்பியுடன் கைது appeared first on Dinakaran.

You Might Also Like

10 ஆண்டு சாதனை 5 ஆண்டுகளில் முறியடிப்பு; வெளிநாட்டில் பதுங்கியிருந்த 134 குற்றவாளிகள் நாடு கடத்தல்: சிபிஐ அதிரடி

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா.. கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார்: பிரதமர் மோடி பாராட்டு!!

பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு செல்ல டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

தெலங்கானாவில் விபத்து 2 உளவுத்துறை டிஎஸ்பிக்கள் பலி: கூடுதல் எஸ்பி, டிரைவர் படுகாயம்

Share This Article
Facebook Email Print
Previous Article திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு தேதி அறிவிப்பு!
Next Article உத்தராகண்ட் பள்ளிகளில் தினமும் பகவத் கீதை உபதேசம் கட்டாயம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்
தமிழ்நாடு
புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமானது!
தமிழ்நாடு
நிதி மோசடி வழக்குகளில் தமிழக அரசு – சிபிஐ இடையே ஒருங்கிணைப்பு இல்லை: ஐகோர்ட்
தமிழ்நாடு
“பாமக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை… அறத்துக்கு கிடைத்த வெற்றி!” – அன்புமணி
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?