ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்நூல் பகுதியில் உள்ள எஸ்எல்பிசி சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் இரண்டாவது நபரின் உடலை மீட்புக் குழுனர் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் கடினமான நிலையில் சிக்கியுள்ள அந்த உடலை மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கூறுகையில், “இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில், சுரங்கத்தினுள் சிக்கியுள்ள மற்றொரு தொழிலாளியின் உடலை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அதை மீட்கும் முயற்சியில் உள்ளோம்” என்று தெரிவித்தனர்.