திருமலை : தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஐஜி சந்திரசேகர் ரெட்டி முன்னிலையில் 14 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். இதுகுறித்து ஐ.ஜி.சந்திரசேகர் கூறுகையில், ‘சரணடைந்த ஒவ்வொரு மாவோயிஸ்டுக்கும் உடனடி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இரண்டு மாதங்களாக மாவோயிஸ்டுகள் சரணடைவதை போலீசார் ஊக்குவித்து வருகிறோம். இந்த ஆண்டு 250 பேர் சரணடைந்தனர். இன்று(நேற்று) 14 பேர் சரணடைந்தனர்.
அவர்களில் இருவர் பகுதி குழு உறுப்பினர்கள். மாவோயிஸ்டுகள் தங்கள் வன்முறைக் கொள்கைகளை கைவிடச் செய்வதே எங்கள் நோக்கம்.
எந்த மாநிலத்திலிருந்தும் வந்து எங்களிடம் சரணடையளாம் மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். மக்களின் வாழ்வாதாரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்தால் வேலை வாய்ப்புகளை வழங்கப்படும்’ என்று கூறினார்.
The post தெலங்கானா மாநிலம் வாரங்கலில் 14 மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைந்தனர் appeared first on Dinakaran.