சென்னை: நடிகர் விஷாலின் தங்கை கணவரான பிரபல நகைக்கடை அதிபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால். இவருக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் இருக்கிறார்கள். அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விஷாலின் தங்கையான ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு விஷாலின் தயாரிப்பு கம்பெனியை நடத்தி வந்தார். இந்த நிலையில், விஷாலின் தங்கையான ஐஸ்வர்யாவுக்கும் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் திருமணம் முடிந்தது.
இந்த நிலையியல், வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக நகைக்கடை அதிபர் உம்மிடி கிரிட்டிஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் பெற உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக உம்மிடி கிரிட்டிஸ் இருந்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5.5 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
The post நடிகர் விஷாலின் தங்கை கணவரான பிரபல நகைக்கடை அதிபர் மீது சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.