புதுடெல்லி: மெருகூட்டப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட அரட்டை செயலி வரும் நவம்பருக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சோஹோ கார்ப்பரேஷனின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உண்மையில் நவம்பர் மாதத்துக்குள் ஒரு பெரிய வெளியீட்டை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அரட்டை செயலியில் கூடுதல் உள்கட்டமைப்பு சேர்க்கப்பட்டாலும், சிக்கல்கள் எழும்போது அவற்றை சரிசெய்ய நிறுவனம் நிரலை புதுப்பித்து வருகிறது. அரட்டை செயலியின் பதிவிறக்கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்ததால், மூன்று நாட்களில் அதன்பயன்பாட்டில் மிகப்பெரிய அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.