தெலங்கானா: ரயில்வே துறையில் லோகோ பைலட் மற்றும் குரூப்-டி பணிக்கான தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்வே துறையில் லோகோ பைலட் மற்றும் குரூப்-டி நிலைக்கான 32,438 காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு இன்று (19.03.2025) தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசிக் கட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், தேர்வு எழுதுவதற்காக ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மன உளைச்சவை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நாளை(மார்ச் 20) காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு இன்று ரத்தான நிலையில் நாளைய தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் நாளை(மார்ச் 20) காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து appeared first on Dinakaran.