ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம் (32), கட்டிட கூலி தொழிலாளி. இவருக்கு சந்தோஷ்குமார்(11), கலைச்செல்வன் என்ற மகன்கள் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், அருகே உள்ள தொட்டூர் என்னும் கிராமத்தில், வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நீர் சேமிப்பு குட்டையில் நீச்சல் கற்றுக்கொடுக்க மகன்களை அழைத்து சென்றார். அப்போது முனிரத்னம் மற்றும் மூத்த மகன் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post நீரில் மூழ்கி தந்தை, மகன் சாவு appeared first on Dinakaran.